வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

 

வேலாயுதம்பாளையம், பிப். 7: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தவிட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் வேலாயுதம்பாளையம் அருகே அண்ணாநகர் 2வது தெருவை சேர்ந்த ராமு (59) கைதுசெய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: