இந்த காட்டு தீயில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி விட்டன. தீ விபத்தில் சிக்கி இதுவரை 51 பேர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேறி உள்ளனர். அதிக வெப்பநிலை, பலத்த காற்று, குறைந்த ஈரப்பதம் காரணமாக தீயை அணைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்க தீயணைப்பு மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவை அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
The post சிலியில் பயங்கர காட்டு தீ: 51 பேர் பலி, 1000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை appeared first on Dinakaran.