தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்

காரியாபட்டி, பிப். 4: திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (பிப்.5) தூத்துக்குடியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான “திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை” தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (பிப்.5) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெறவுள்ளது.

அதை முன்னிட்டு விருதுநகர் தெற்கு-வடக்கு மாவட்ட அறிக்கையின்படி மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள முக்கிய அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

The post தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: