இதையடுத்து ஆட்களை வைத்து அறுவடை செய்தார். இதில் 2 ஏக்கரில் மொத்தம் 16 மூட்டை நெல் கிடைத்தது. இதுகுறித்து ஜெயராஜ் கூறுகையில், ‘கடந்த முறை நெல் சாகுபடி செய்தபோது போதிய மகசூல் இல்லாமல் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அடுத்து சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டேன். இந்நிலையில்தான் வயலில் நெற்பயிர் விளைந்திருப்பது தெரிய வந்தது. கடந்த முறை கதிர் அறுத்து விட்டு அடியில் உள்ள அறுப்பு தாளிலிருந்து பயிர் வளர்ந்து அதில் நெல் விளைந்திருக்கிறது. இது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு வளர்வது சாதாரணம் என்றாலும் அறுவடை செய்யும் அளவிற்கு பயிர் வளராது. ஆனால் இந்த ரகம் உயரமாக வளர்ந்து நெல்மணிகள் விளைந்திருக்கிறது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஏக்கருக்கு எட்டு மூட்டை விளைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,’ என்றார்.
The post நாற்று நடவுமில்ல, தண்ணீர் பாய்ச்சவுமில்ல ஆனா 2 ஏக்கரில் 16 மூட்டை நெல் மகசூல்: தஞ்சாவூர் அருகே ருசிகரம் appeared first on Dinakaran.