இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை : நீதிபதி கருத்து

மதுரை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அறநிலைய அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கினாலும் பணி செய்வதில் மெத்தனமாக உள்ளதாக நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார். பூம்புகார் கப்பல் நிறுவனம் கோயிலுக்கு ரூ.3 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த போதும் இதுவரை வசூல் செய்யவில்லை என்றும் வாடகை பாக்கி இருந்தால் ஏழைகளின் கடையை காலி செய்யும் அதிகாரிகள், பெரிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். திருத்தொண்டர் சபை ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை : நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: