நாகப்பட்டினம்,பிப்.2: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபானம் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் நாகப்பட்டினம் ரயில்வே கேட் பகுதியில் நடத்திய சோதனையில் கீழ்வேளூர் அருகே ஆணமங்கலம் பகுதியை சேர்ந்த வீரமணி (47) கைது செய்தனர். அவரிடமிருந்து 165 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post காரைக்காலில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மதுபானம் கடத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.