2 ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள 50 மேல்நிலை பள்ளிகளுக்கு ஆண்டு விழா நடத்த ரூ.50 ஆயிரமும், 1,000 முதல் 2,000 மாணவர்கள் வரை படிக்கும் 339 மேல்நிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள், 2 தொடக்கப் பள்ளிகள் என 350 பள்ளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதமும், 501 மாணவர்கள் முதல் 1,000 மாணவர்கள் வரை படிக்கும் 1,251 மேல்நிலைப் பள்ளிகள், 79 உயர்நிலைப் பள்ளிகள், 64 நடுநிலைப் பள்ளிகள், 44 தொடக்கப்பள்ளிகள் என 1,438 பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதமும், 251 முதல் 500 மாணவர்கள் வரை படிக்கும் 1,112 மேல்நிலைப்பள்ளிகள், 564 உயர்நிலைப் பள்ளிகள், 493 நடுநிலைப் பள்ளிகள், 288 தொடக்கப்பள்ளிகள் என 2,457 பள்ளிகளுக்கு தலா 8 ஆயிரம் வீதமும், 101 முதல் 250 மாணவர்கள் வரை படிக்கும் 372 மேல்நிலைப்பள்ளிகள், 1,859 உயர்நிலைப் பள்ளிகள், 3,512 நடுநிலைப் பள்ளிகள், 2,236 தொடக்கப்பள்ளிகள் என 7,979 பள்ளிகளுக்கு தலா 4 ஆயிரம் வீதம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 100 மாணவர்களுக்குக் கீழ் படிக்கும் 32 மேல்நிலைப்பள்ளிகள், 587 உயர்நிலைப் பள்ளிகள், 2,903 நடுநிலைப் பள்ளிகள், 21,780 தொடக்கப்பள்ளிகள் என 25,302 பள்ளிகளுக்கு தலா ரூ.2,500 வீதம் ரூ.14 கோடியே 93 லட்சத்து 97 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. 10ம் தேதிக்குள் ஆண்டு விழாவை நடத்திட வேண்டும்.
The post தமிழ்நாடு முழுவதும் 37,576 அரசு பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு: வரும் 10க்குள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.