தமிழ்நாட்டில் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம் என அறிவித்த முதலமைச்சருக்கு த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நன்றி..!!

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என அறிவித்த முதலமைச்சருக்கு த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; வங்கதேசம், பாக்., நேபாளத்தில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பாஜக அரசு கூறுகிறது. அண்டை நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை என சிஏஏ சட்டம் கூறுகிறது. இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவதாக கூறும் பாஜக அரசு, நாடகம் நடத்துகிறது. அதே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று மோடி அரசு மறுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

The post தமிழ்நாட்டில் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம் என அறிவித்த முதலமைச்சருக்கு த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: