இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பெட்ரோல்-டீசல் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை கணிசமாக குறைத்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.13, டீசல் லிட்டருக்கு ரூ.16 குறைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 2022, ஏப்ரல் மாதம் முதல் விலையை உயர்த்தவில்லை. கடந்த 600 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் தொடர்ந்து 620-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது. இதற்கிடையே இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனை மூலம் கணிசமான அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது. 2023-24-ம் ஆண்டு முதல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.75 ஆயிரம் கோடி லாபம் உபரியாக கிடைத்திருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த விலை குறைப்பு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 620 நாட்களாக மாற்றமில்லை! appeared first on Dinakaran.