பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில், காந்தி நினைவு நாளையொட்டி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.மதிமுக மாவட்ட அவை தலைவர் ஜோதிபாசு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா முகமது, இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் முரளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மணிமாறன், நகர குழு உறுப்பினர் பயாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சண்முகம், இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ராணி, மமக மாவட்ட துணை செயலாளர் அக்பர் பாஷா, நகர தலைவர் சாதிக் பாஷா, நகர செயலாளர் நிசார் பாஷா, சலீம் மாலிக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: