இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதுமான எந்த காரணமும் இல்லாததால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து விசாரணையை ஜனவரி 31க்கு நீதிபதி அல்லி தள்ளிவைத்தார். இதை தொடர்ந்து நாளை வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
The post விசாரணையை தள்ளி வைக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் மனு appeared first on Dinakaran.