அதிமுக தொகுதி பங்கீட்டு குழு இன்று கூடுகிறது

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அரசியல் களத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், கூட்டணி கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கின்றனர்.

The post அதிமுக தொகுதி பங்கீட்டு குழு இன்று கூடுகிறது appeared first on Dinakaran.

Related Stories: