பேராவூரணி வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

 

பேராவூரணி, ஜன.26: பேராவூரணியில் வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சீனிவாசன், துணைத் தலைவராக அருண்சின்னப்பா, செயலாளராக சிவேதிநடராஜன், இணைச் செயலாளராக கரிகாலன், துணைச் செயலாளராக மாதவி, பொருளாளராக முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர்களாக மோகன், அருள்நம்பி, அக்பர், முரளி, முத்துவேல், நித்யா, கதிரவன், சேகர், ஏகாம்பரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post பேராவூரணி வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: