அப்போது, தமிழ்நாடு அரசு பத்திரிகையாளருக்கு வழங்கும் ஓய்வூதியத் திட்டம், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்ப உதவி நிதி திட்டம், சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.5லட்சம் பரிசுதொகையுடன் கூடிய கலைஞர் எழுதுகோல் விருது திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் மூலம் பத்திரிகையாளர் நலன்களை காப்பதில் தமிழ்நாடு அரசு ஆற்றி வரும் பணிகள் வியந்து பாராட்டத்தக்கது. பத்திரிகையாளர்களின் நலன்களைக் காப்பதில் தமிழ்நாடு அரசு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என கவுன்சில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
The post பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள் இந்தியாவிற்கே வழிகாட்டத்தக்கவை: இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் பாராட்டு appeared first on Dinakaran.