திருத்தணியில் அரியவகை பூச்சிகள் கண்டுபிடிப்பு

திருத்தணி: திருத்தணியில் அரியவகை பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகசாமி கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் 30 அரிய வகை பூச்சிகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஈனேஷ் சித்தார்த்தராவ் என்பவர் வந்து ஆறுமுகசாமி கோயில் தெருவில் உள்ள செடி, கொடிகளில் உள்ள பல்வேறு வகையான பூச்சிகளை படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

இதில் இதுவரை அரியபடாத அரியவைகை பூச்சி இருந்தது. இது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பூச்சியை காண பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post திருத்தணியில் அரியவகை பூச்சிகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: