இந்நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று வெளியிட்டது. இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: இந்திய வனப்பணிக்கான மெயின் தேர்வில் 367 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 35 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 21 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். ஒட்டுமொத்தமாக சங்கர் ஐஏஎஸ் அகாடமியில்(தமிழ்நாடு, திருவனந்தபுரம், டெல்லி, பெங்களூரு) 154 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி மற்றும் மாதிரி நேர்முக தேர்வு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் இந்திய வனப்பணி மூத்த அதிகாரிகள் மற்றும் சிறந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்குபெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதில் பங்குபெற ஆர்வம் உள்ள மாணவர்கள் 6379784702, 9003073321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். நேர்முக தேர்வு முடிந்த பின்னர் நேர்முக தேர்வு, மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும். அதன் பின்னர் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். அதை தொடர்ந்து அவர்கள் பணியில் சேருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஎப்எஸ் மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.