மேற்கண்ட 3 பேரும் ஆயுதமேந்திய குழுக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் இரு குழுக்களுக்கும் இடையே மீண்டும் வன்முறை நடைபெற்று வருகிறது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘மணிப்பூருக்கு அருகில் இருக்கும் இட்டா நகருக்கு வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து ஏன் பேசவில்லை? அமைதியாக ஏன் இருக்கிறீர்கள்? பாஜகவின் தலைவராக இருக்கும் அவர், மணிப்பூர் வன்முறை பற்றி ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியை பற்றி பேசாமல் அவர்களால் தூங்க முடியாது’ என்றார்.
The post மணிப்பூரில் விறகு சேகரிக்க சென்ற 3 பேர் சடலம் மீட்பு காங்கிரஸ் குறித்து பேசாமல் அவர்களால் தூங்க முடியாது!: பாஜகவை விளாசிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி appeared first on Dinakaran.