அதேநேரம் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதல்களையும், அதன் பின்னணியில் இருப்பவர்களை மீது நடவடிக்கை எடுப்பதையும் ஆதரிக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. காசா மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது. இஸ்ரேல், பாலஸ்தீனம் உள்ளிட்ட பிராந்திய தலைவர்களுடன் இந்திய தலைமை தொடர்பில் உள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு இரண்டு தவணைகளாக 16.5 டன் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட 70 டன் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம். இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்’ என்று கூறினார்.
The post இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அப்பாவிகள் பலியாவதை கண்டிக்கிறோம் ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பேச்சு appeared first on Dinakaran.