சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு 6 வாரத்தில் நியமிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு 6 வாரத்தில் தகுதியானவர்களை நியமிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில அளவில் மூத்த அதிகாரி உள்ள நிலையில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநராக செந்தில்குமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கூடுதல் இயக்குநர் ராஜசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நியமனத்தை ரத்து செய்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு, செந்தில்குமார் மேல்முறையீடு செய்தனர். தனிநீதிபதி உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

 

The post சுகாதாரத்துறை இயக்குநர் பதவிக்கு 6 வாரத்தில் நியமிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: