மற்றொரு தமிழரான 2005ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரி எம்.பாலாஜி. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் உள்ள இந்திய துணைத்தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, ஆசிய வளர்ச்சி வங்கியில் செயல் இயக்குநர் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரி விகாஷ் ஷீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, சர்வதேச நாணய நிதியத்தில் செயல் இயக்குநரின் ஆலோசகராக ஈஐஆர்எஸ் அதிகரி பர்வீன் குமாரும், பிலிபைன்சின் மணிலாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியில் செயல் இயக்குநரின் ஆலோசகராக ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சாரங்கியும், பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு ஐஆர்எஸ் அதிகாரி கல்யாண் ரேவல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு, ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தன அமைப்பில் தனு சிங் என்பவர் முதன்மை செயலர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தூதர்களாக நியமனம் appeared first on Dinakaran.