வேலை நிறுத்த விளக்க கூட்டம்

 

திருப்பூர், ஜன.5: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் குறித்து கோரிக்கை விளக்க கூட்டம் திருப்பூர் காங்கயம் ரோட்டிலுள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐடியு துணை பொதுச்செயலாளர் தேவநேசன் தலைமை வகித்தார். டிடிஎஸ்எப் சங்கத்தின் துணை தலைவர் செந்தமிழ் செல்வன், பொருளாளர் முருகானந்தம், சிஐடியு துணை பொதுச்செயலாளர் கொங்குராஜ், பொதுச்செயலாளர் செல்லதுரை,

ஏஐடியுசி துணை செயலாளர் குமரேசன், ஓய்வு பெற்ற நல அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அரசு வரும் 9ம் தேதிக்குள் தொழிற்சங்கங்களை அழைத்து பேசி ஓய்வு பெற்ற ஊழியர்களின் டி.ஏ உயர்வை வழங்க வேண்டும். 15ஆவது ஊதியம் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். பேச்சுவார்த்தையை துவக்க மறுத்தால் ஜனவரி 9ம் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்று வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

The post வேலை நிறுத்த விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: