சிலர் ஓய்வு எடுக்கவும், ஒருசிலர் குடும்பத்தினரை சந்திக்கவும், மேலும் சிலர் மேலதிக போர் பயிற்சிகளை மேற்கொள்ளவும் உள்ளதால் சில ஆயிரம் ராணுவத்தினர் வௌியேற உள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர், மத்திய காசாவின் ஜபாலியா ஆகிய இடங்களில் இஸ்ரேல் வான், தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. இதில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழுகை நடத்தும் இடம் சின்னாபின்னமாகி விட்டது. நீடிக்கும் போர் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஈரானின் தூண்டுதலால் ஹிஸ்புல்லாக்கள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலை நிறுத்தா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் ” என்று எச்சரித்திருந்தார்.
The post ஹமாஸ் அழியும் வரை போர் தொடரும் என நெதன்யாகு உறுதி தெற்கு, மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் appeared first on Dinakaran.