இலங்கை கடற்படையினர் தங்கும் முகாமிற்குள் புகுந்த யானை: விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள்!!

இலங்கை: இலங்கை அம்பாறை அருகே அமைந்துள்ள கடற்படை முகாமிற்குள் புகுந்த யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை பிடிக்கும் பணியிலும், வனப்பகுதிக்குள் விரட்டும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் காட்டுயானைகள் அதிகாலையில் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் தோட்டங்களுக்கு சென்றுவரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை பாணமை பகுதியில் கடற்படையினர் தாங்கக்கூடிய முகாம் உள்ளது. இங்கு யானை ஒன்று முகாமிற்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. எனினும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடற்படை முகாமிற்கு சுமார் 18 கிலோ மீட்டருக்கு தொலைவில் இருந்து வந்த யானை முகாமிற்குள் புகுந்துள்ளது.

The post இலங்கை கடற்படையினர் தங்கும் முகாமிற்குள் புகுந்த யானை: விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: