நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்குள், டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்தது. JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹானெடா விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்த கடலோர காவல் படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்துள்ளது. இதனால் தீப்பிழம்புடன் தரையிறங்கிய விமானம் மளமளவென எரியத் தொடங்கிய நிலையில் தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. விமானத்தின் பின்பக்க பகுதியில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 367 பயணிகள் உயிர் தப்பியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
The post நிலநடுக்கத்தால் 48 பேர் பலியான நிலையில், ரன்வேயில் விமானம் தீப்பிடித்தது.. உயிர் தப்பிய 300 பயணிகள் :ஜப்பானில் தொடரும் அதிர்ச்சி!! appeared first on Dinakaran.