வடசென்னை அனல் மின்நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் நேற்று முதல் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

The post வடசென்னை அனல் மின்நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: