ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஊத்துக்கோட்டை, டிச.30: ஊத்துக்கோட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இதில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2024ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சீனிவாசன் நடத்தி வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சாந்தகுமார், செயலாளர் கவிபாரதி, துணைச்செயலாளர் சூர்யா என்ற சிலம்பரசன், பொருளாளர் நரசிம்மன், காப்பாளர் தீனதயாளன், நூலகர் ராஜ்குமார், தணிக்கையாளர் ஸ்ரீ வித்யா, செயற்குழு உறுப்பினர்களாக கமலாகரன், வெஸ்லி, பி.எம்.சாமி, முருகன், பார்த்திபன், ராஜசேகர், வெற்றிதமிழன், செஞ்சிநாதன், மகேந்திரன், பாலசுப்பிரமணியகுமார், சுரேஷ், சீனிவாசன், பொன்னுசாமி, முனுசாமி, இளங்கோவன், கணபதி, வாசுதேவன், கன்னியப்பன், பிரகாஷ், பழனி, சுரேஷ், சுந்தர்ராஜ், ஆகியோர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: