தமிழக தொகுதி பங்கீடு டெல்லியில் காங். ஆலோசனை

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டு குழு தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் கலந்து கொண்டார். ப.சிதம்பரம், செல்லக்குமார், செல்வ பெருந்தகை, மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

இதில்,தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர், கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தேர்தலை எதிர் கொள்வது எப்படி, அதற்கான தேவைகள் என்ன, கூட்டணி கட்சிகளின் நிலவரம் என்ன, எதிர்கட்சிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு நாங்கள் , தழ்நாட்டை பொறுத்தமட்டில் மதசார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளோம் என கூறினார்.

The post தமிழக தொகுதி பங்கீடு டெல்லியில் காங். ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: