பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எண்ணூர் தனியார் உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட 42 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தேன். எல்லோரும் நலமுடன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரிரு மணி நேரத்தில் வீடு திரும்புவர். மேலும், எண்ணூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சென்னை மாநகராட்சியும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் ஒருங்கிணைந்து, பெரியகுப்பம் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. மேலும், அந்த தனியார் உரத்தொழிற்சாலையை தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் மூலம் தற்காலிகமாக மூடுவதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
The post அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட முதல்வர் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.