கடந்த நவம்பரில் தானியங்களின் விலை 10.27 விழுக்காடு கூடியதை அடுத்து, அம்மாதத்தில் உணவுப் பணவீக்கம் 8.70 விழுக்காடு உயர்ந்தது. அதற்கு முந்திய மாதத்தில் இது 6.61 விழுக்காடாக இருந்தது. பயனீட்டாளர்கள் தங்களது மொத்த செலவில் கிட்டத்தட்ட பாதி உணவிற்காகச் செலவிடுகின்றனர். இந்திய உணவுக்கழக இருப்பில் இருந்து கோதுமையை விற்பனைக்கு விடுத்ததன் மூலம் கோதுமை விலை கட்டுக்குள் உள்ளது. எனவே அரிசி விலை கட்டுக்குள் வராமல் உயர்ந்து கொண்டே செல்வதை அடுத்து பாரத் பிராண்ட் பெயரில் அரிசியை விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.
The post ‘பாரத்’ அரிசி விரைவில் அறிமுகம்: ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டம்..!! appeared first on Dinakaran.