இதனையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவர் குழு உயிரிழந்த குட்டியானைக்கு உடற்கூறு ஆய்வு செய்தது. ஆய்வில் உயிரிழந்த குட்டி யானை ஆண் யானை எனவும், அது சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க குட்டி எனவும் தெரியவந்தது. மேலும், குட்டி யானையின் உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக முடிவு வந்த பிறகு யானை குட்டியின் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post வால்பாறை அருகே இரண்டு வயதான குட்டி ஆண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.