லாலாபேட்டை, மாயனூர் பகுதியில் கஞ்சா விற்க முயன்ற 2 பேர் மீது வழக்கு

கரூர், டிச. 19: கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை மற்றும் மாயனூர் பகுதிகளில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக மாவட்ட எஸ்பியின் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வழக்கு பதிந்து வருகின்றனர். அந்த வகையில், லாலாப்பேட்டை மற்றும் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிந்து 65 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post லாலாபேட்டை, மாயனூர் பகுதியில் கஞ்சா விற்க முயன்ற 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: