இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1,824 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 263 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டு விட்டதாகவும், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post தமிழகத்தில் எத்தனை கோயில்களில் சிலைகளை பாதுகாக்கும் ஸ்ட்ராங்க் ரூம்கள் உள்ளன? அறநிலையத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.