சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமதாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால் நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு, நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில் இந்த பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்தவித சிரமமும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
The post மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு: ஐகோர்ட்டில் பொதுநல மனு appeared first on Dinakaran.