கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த பேருந்து நிலையத்தை சுற்றி ஏராளமானோர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை கட்டி வியாபாரம் செய்து வந்தனர். இதனால், பேருந்துகள் வந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. இதனால், ஊராட்சி சார்பில், பேருந்து நிறுத்தத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 15 கடைகள் இடிக்கும் பணி இடிக்கும் பணி நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பொறியாளர் சங்கர், துணைத் தலைவர் விஜயா தேவசிகாமணி ஆகியோர் பார்வையிட்டனர். இதனால், அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.
The post சூனாம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே 15 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.