இதைத்தொடர்ந்து, புதுப்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு சமையல் எண்ணெய், 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு ரமேஷ், திமுக நிர்வாகிகள் வாசுதேவன், தாமோதரன், ஆறுமுகம், பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புதுப்பாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஒன்றிய குழு தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.