இந்த தீமிதி திருவிழாவை காண 500க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் என கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், ரெட்டம்பேடு தலைவர்கள் சங்கர், முரளி உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் முன் நின்று சிறப்பாக நடத்தினர். இதனை தொடர்ந்து, துர்ககாளிஅம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதியும் வானவேடிக்கையும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். தீமிதி திருவிழாவில் தண்டலச்சேரி கிராம பெருந்தமைக்காரர் உள்ளிட்ட பொதுமக்கள் முன்னின்று நடத்தினர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, கும்மிடிப்பூண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கும்மிடிப்பூண்டி அருகே துர்ககாளி திருக்கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.