இந்நிலையில், நேற்று தேனி நகர் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட பாஜ அலுவலகம் முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாஜவினர் திரண்டனர். அப்போது மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும், பி.சி.பாண்டியனை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும், தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜபாண்டியன், போடி ராமநாதன் ஆகியோரை அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள், சரவணன், பிரபாகரன், ரவி மற்றும் சிவக்குமாரன், ராஜா, முருகத்தாய், சின்னத்தாய், ராஜீவ் காந்தி, அய்யர் உள்ளிட்ட சுமார் 200 பேர் தங்களது கட்சிப்பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதங்களை கட்சி அலுவலகத்தில் அளித்தனர். இதனால் அம்மாவட்ட பாஜ கூண்டோடு காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது..
The post கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 200 நிர்வாகிகள் ராஜினாமா தேனி மாவட்ட பாஜ காலி: மாவட்ட தலைவர் மீது சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.