குடிநீர் தொட்டிகளில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த கரும் பலகைகளுக்கு வண்ணம் பூச வேண்டும். கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளை முழுவதும் ஆய்வு செய்து கொடிய விஷ ஜந்துகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4 மாவட்டங்களில் உள்ள 17 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வுகளில் அனைத்து கல்லூரிகளும் வழக்கம்போல செயல்பட தயாராக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மிக்ஜாம் புயலுக்கு பிறகு நாளை முதல் திறப்பு 4 மாவட்ட கல்லூரிகளில் அதிகாரிகள் ஆய்வு: உறுதித்தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.
