திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரீரங்கம் – சமயபுரம் டோல்கேட் பகுதியை இணைக்கும் பழைய கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை கடக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்தின் 19வது மதகு அருகே தடுப்புக்கட்டையை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் கார் கவிழ்ந்துள்ளது.