லட்சத்தீவு அருகே காற்று சுழற்சி 6 நாட்களுக்கு மழை பெய்யும்

சென்னை: லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மிக்ஜாம் புயல் வங்கக் கடலில் உருவாகி சென்னையை ஒட்டியபடி ஆந்திரா, ஒடிசா வழியாக சத்தீஸ்கர் சென்றது. இந்த புயலின் பெரும்தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி கேரள மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் வங்கக் கடலில் இருந்து குளிர்ச்சியான காற்று ஈர்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 6 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 12ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post லட்சத்தீவு அருகே காற்று சுழற்சி 6 நாட்களுக்கு மழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: