அதேபோன்று அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை மற்றும் ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அனைத்து முக்கிய சாலைகளும் சுமார் 3 அடி உயரம் வரை மழை நீரால் சூழ்ந்து காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பின் தரைதளத்துக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு குடியிருக்கும் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். காரணம், கடந்த காலங்களில் இதைவிட பெரிய மழை பெய்தபோதுகூட இவ்வளவு தண்ணீர் வந்ததில்லை.
ஆனால் மிக்ஜாம் புயலால் கடல் பகுதியில் அடித்த சூறை காற்றால் கடல் மட்டம் அதிகளவு உயர்ந்து ஆறுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடலுக்குள் செல்ல முடியாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மழை வெள்ளம் புகுந்தது appeared first on Dinakaran.