சென்னையில் விமான நிலையம் மிதக்கிறது: 23 விமானம் ரத்து

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் தண்ணீரில் மிதப்பதால் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 10 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் விமான நிலையத்தில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையத்தில் உள்ள ஓடுபாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி உள்ளது.

சென்னையில் இருந்து இலங்கை, துபாய், விஜயவாடா, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், அகமதாபாத், மும்பை, மதுரை, ஐதராபாத் உள்பட 11 விமானங்களின் புறப்பாடு மற்றும் இலங்கை, கோவை, திருச்சி, விஜயவாடா, ராஜமுந்திரி, சேலம், தூத்துக்குடி, கொச்சி, மும்பை, அகமதாபாத், மதுரை, ஐதராபாத் ஆகிய 12 விமானங்களின் வருகை என மொத்தம் 23 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

The post சென்னையில் விமான நிலையம் மிதக்கிறது: 23 விமானம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: