மிக்ஜாம் புயலால் தடைபட்ட மின்சாரம் படிப்படியாக மீண்டும் வழங்கப்படும்

சென்னை: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 3ம் தேதி இரவு முதல் பல்வேறு இடங்களில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது. காற்றுடன் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதியே மின்வாரியம் தரப்பில் மின் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புயல் சீற்றம் தணிந்து தண்ணீர் வடிய ஆரம்பித்தவுடன், மின்சாரம் படிப்படியாக மீண்டும் வழங்கப்படும் என பதிவிடப்பட்டுள்ளது.

* மக்களின் பாதுகாப்பு முக்கியம் மின் வாரியம் அறிவிப்பு

The post மிக்ஜாம் புயலால் தடைபட்ட மின்சாரம் படிப்படியாக மீண்டும் வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: