சென்னை மெரினா கடற்கரை மூடல்

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை மெரினா கடற்கரையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளது. கடற்கரை மணல் பரப்பிற்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை எண்ணூர், காசிமேட்டில் காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பட்டினப்பாக்கம், மெரினாவிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

The post சென்னை மெரினா கடற்கரை மூடல் appeared first on Dinakaran.

Related Stories: