×

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேர் கைது

திருச்சி, டிச.2: வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கருப்பூர் சீனாம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(51). இவர் கடந்த 29ம் தேதி இரவு ஓமனில் இருந்து திருச்சி வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், அவர் முத்துச்சாமி என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் எடுத்து ஓமனுக்கு சென்று திரும்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதே போல் மதுரை மாவட்டம் மேலூர் மாங்குளப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக்(27). இவர், கடந்த 29ம் தேதி இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வந்தார். அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பாஸ்போர்ட்டின் 19ம் பக்கத்தில் புறப்படும் தேதி மாற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த 2 சம்பவங்கள் குறித்து இமிகிரேஷன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,Ariyalur District ,Semmanthakudy ,
× RELATED அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு