அப்போது தங்களது பெயரில் பணமில்லாதது குறித்த தகவல் வரவே அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி கிளை மேலாளரான ரத்தினவேலிடம் முறையிட்டுள்ளனர்.இதையடுத்து அவர் மேற்கண்ட வாடிக்கையாளர்களின் ஷேர் மார்க்கெட் வரவு, செலவு விபரங்களை ஆய்வு செய்தபோது 3 நபர்களின் பெயரில் போலி ஆவணங்கள் ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், போலி முகவரி, அடையாள அட்டை ஆகியவற்றை தயாரித்து ரூ.45 லட்சத்து 67 ஆயிரத்து 208ஐ நூதனமாக மோசடி செய்திருப்பது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக, அங்கு ஊழியராக பணியாற்றும் சுந்தரம் (46) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்தில், ரத்தினவேல் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த 45.67 லட்ச ரூபாய் மோசடி: ஊழியர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.
