சென்னை விமான நிலையத்தில் 22 விமானம் மழையால் தாமதமாக சென்றன

சென்னை: மழை காரணமாக பயணிகள் தாமதமாக வந்ததால் சென்னை விமான நிலையத்தில் நேற்று 22 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, தோகா ஆகிய 4 சர்வதேச விமானங்கள், அந்தமான், ஐதராபாத், மும்பை, டெல்லி, புனே, கோவை, சேலம், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், சிலிகுரி, வாரணாசி, பெங்களூர் உள்ளிட்ட 18 உள்நாட்டு விமானங்கள் என 22 விமானங்கள் நேற்று தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பெருமளவு பயணிகள், விமானிகள் உட்பட பொறியாளர்கள் வருவதில் தாமதம் மற்றும் விமானங்களில் சரக்குகள் ஏற்றுவது, உணவுப் பொருட்களை ஏற்றுவது தாமதம் உள்ளிட்ட காரணத்தினால் இந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னைக்கு வரவேண்டிய விமானங்களில் சிங்கப்பூர், கோலாலம்பூர், டெல்லி, அந்தமான் உள்ளிட்ட 5 விமானங்கள் தவிர, மற்ற அனைத்து விமானங்களும் குறித்த நேரத்தில் தரை இறங்கின.

The post சென்னை விமான நிலையத்தில் 22 விமானம் மழையால் தாமதமாக சென்றன appeared first on Dinakaran.

Related Stories: