வேங்கைவயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனைக்காக 10 பேர் ஆஜர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட 31 நபர்களில், 10பேருக்கு மட்டும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புதுகை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, நேற்று மாலை குறிப்பிட்ட 10 பேரும் அவர்களது வக்கீல்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, முறையான வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் மனு செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

The post வேங்கைவயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனைக்காக 10 பேர் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: