தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் பலி

நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (55). ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். மணிகண்டன் குடும்பத்தினருடன் அவரது தாயார் புஷ்பம் (80) என்பவரும் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த புஷ்பம் நேற்று முன் தினம் இரவு மரணம் அடைந்தார்.

இதனால் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். இரவு முழுவதும் தாயின் உடல் அருகில் அமர்ந்து விடிய, விடிய அழுதவாறு இருந்தார். அவ்வப்போது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். பின்னர் நேற்று காலை தாயின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

The post தாய் இறந்த அதிர்ச்சியில் மகன் பலி appeared first on Dinakaran.

Related Stories: