மேலும், முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரியகாலத்தில் பெற்றிட ஒற்றைசாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல்அமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிகரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்தவாய்ப்புகளை வழங்குகிறது.
விண்வெளிதகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோ மொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவுபகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உள்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலகமுதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கியதளமாக செயல்படும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கும் கருத்தரங்கு இன்று (29ம் தேதி) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.4,914 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.5,011.48 கோடிக்கான 362 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. எனவே, இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆர்வமுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஜனவரி 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்க வேண்டும்: திருவள்ளூர் கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.